சென்னையில் பிறந்து வளர்ந்த தோழர் லட்சுமணன், கால்நடைத்துறை ஆய்வாளராக பணியில் சேர்ந்து அந்தத் துறையில் ஊழியர்களை அமைப்பாக திரட்டினார். அன்றைய காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டதால் அரசுப் பணியை துறந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார்.இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் கைத்தறிநெசவாளர்களை மையப்படுத்தியே கட்சி செயல்பட்டு வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கட்சியை பரவலாக வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்தார்.அன்றைய செங்கை மாவட்டம் என்பது செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் என இன்றைய 3 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
1981 ஆம் ஆண்டு உருவாகிய இந்த மாவட்டத்தின் முதல் செயலாளரான தோழர் லட்சுமணன், போக்குவரத்து, தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் குறைவான அக்காலத்தில் அரும்பாடுபட்டு கட்சி மற்றும் வர்க்க-வெகுஜன அமைப்புகளை கட்டியமைத்தார்.இளம் தோழர்களை கட்சிக்குள் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் அவரே. மாணவர்களை, வாலிபர்களை உற்சாகப்படுத்தி கட்சிப்பணிகளில் ஈடுபடுத்துவதில் தனிக் கவனம் செலுத்தினார்.செங்கல்பட்டு நகரில் பலதரப்பு மக்களையும் ஈடுபடுத்தும் வகையில் செங்கை பாரதியார் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என பலதரப்பினரையும் உள்ளடக்கி மாதந்தோறும் இலக்கிய சொற்பொழிவுகளை நடத்திவந்தார்.தமிழகத்தில் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளை பங்கேற்க செய்து மிகச் சிறப்பான முறையில் செவி நுகர்நிகழ்வுகளை வழி நடத்தினார்.இக்காலத்தில் 2017 முதல் செங்கல்பட்டில்நடந்துவரும் புத்தக திருவிழா நிகழ்வில் பங்கேற்பதிலும் அதை மேலும் சிறப்பாக நடத்துவதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கதவறியதில்லை.டிசம்பர் மாத கடும் பனிப்பொழிவிலும் பத்து நாட்களும் நிகழ்ச்சிகள்முடியும் வரையில் வழிகாட்டி உற்சாகப்படுத்தி வருவார்.
செங்கல்பட்டுநகரில் நடைபெறும் இயக்கங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம்பங்கேற்க தவறியதில்லை.வீட்டில் கிடைக்கும் சிறிது நேர ஓய்வை கூட புத்தகம் படிப்பதில்பயன்படுத்திக் கொள்வார். செங்கல்பட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தாலும் படிப்பது, எழுதுவது என்று எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருப்பார்.செங்கல்பட்டில் தோழரை சந்திக்க வீட்டிற்கு காலை 7 மணிக்குசென்றால் அதற்குள்ளாக குளித்து முடித்து தயாராகி படித்துக் கொண்டிருப்பார். சோர்வடையாமல் கட்சிப் பணியில் ஈடுபடும் பண்பையும் ஓய்வுநேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும் தோழரிடம் இருந்து கற்றுக் கொண்டோம்.இவை அனைத்திற்கும் மேலாக மாவட்டத்தில் கட்சித் தோழர்களின் குடும்பங்களோடு அவருக்கிருந்த தொடர்பும் நெருக்கமும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஒன்று கலந்து விடுவர்.அந்த அளவுக்கு கட்சிக் குடும்பங்களின் மீது அக்கறையும், பாசமும்கொண்டு வழிகாட்டும் தலைவர் தோழரை எல்லோரும் அன்புடன் டி.எல்என்றே அழைப்போம்.கட்சித் தலைவராக, சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்த அவரது எண்ணங்களை நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
கட்டுரையாளர் :
====இ.சங்கர்====
சிபிஐ(எம்) காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்